பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில், கைகள் இரண்டையும் மெதுவாகத் தூக்கி பக்க வாட்டில் அழுந்துமாறு ஊன்றி வைத்துக் கொண்டு உடலை மேலே தூக்க வேண்டும். மேலே தூக்கும் போது முதுகு நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதே நிலையில் சற்று நேரம் இருந்த பிறகு உடலைத் தரையில் பதிக்க வேண்டும். முகம் நேராக, கண்களும் நேராக பார்க்க வேண்டும். உடலைத் தூக்கும் போதே மூச்சை நன்கு உள்ளே இழுத்துப் பின் விட வேண்டும். 1 நிமிடம் செய்தால் போதும். இரண்டு மூன்று முறைகள் அதற்குள் மேலே உடலைத் தூக்கலாம்.

பலன்கள்

தொந்திகளையும், ஜீரண உறுப்புகள் யாவும் நன்கு வேலை செய்யும். தோளும்- கைகளும் வலிமை அடையும். மலச்சிக்கலும், அஜீரணமும் ஓடிப் போகும். கணையம் என்னும் வயிற்றின் உள்ளுறுப்பு நன்கு வேலை செய்வதால் எந்தவித நீரழிவு நோயும் பறந்து விடும். அண்டாது. எலும்பெல்லாம் பலம் பெறும். தசைகள் இறுதி நல்ல உடற்கட்டு ஏற்படும்.

ஆஸ்துமா நோய்க்காரர்களுக்கு நெஞ்சு விரிவடைந்து நுரையீரலில் அதிக சுவாசம் இழுக்கும் அளவுக்கு மெல்ல மெல்ல சக்தி கூடுகிற அற்புத ஆசனம் இது. கூடு போன்ற குறுகிய மார்பு உடையவர்கள் கட்டாயம் இந்த ஆசனத்தை காலையிலும், மாலையிலும் சுமார் ஆறு, ஆறு தடவைகள் செய்து வந்தால் மார்பகமே நன்கு விரிந்து கொடுத்து நாளடைவில், கூடு சரியாகி விடும். அகன்ற மார்பு வரும். பெண்களுக்கும் மார்பகம் விரியவும், சிக்கென்று இருக்கவும் இந்த ஆசனமே சிறந்தது.

பெண்களுக்கு மாதவிடாயின் போது வருகிற வலிகள் அத்தனையும் அதிசயிக்கத்தக்க விதத்தில் நீங்கி விடும்.